பிறந்த நாளை மறந்ததால் கோபம் வித்யாவுக்கு…..
தேர்வு செய்த பரிசுப் பொருள் பிடிக்கவில்லை உமாவுக்கு…..
பிறர் மத்தியில் ‘குண்டு’ என்றதால் கோபம் ராதாவுக்கு…..
வாங்கி வரச் சொன்ன பியூர் காப்பிப் பொடியை கொண்டு வராததால் முகந்திருப்பிய லட்சுமி….
ஒவ்வொருவரிடமும் பத்துப் பத்து நிமிஷம் கெஞ்சியதில் கிடைக்கவில்லை சமாதானம்….!
அலுவலகம் விட்டுத் திரும்பியதும் ‘வீட்டு வாசப்படி கூட மிதிக்கலை….!
மனுஷன்னு கூடப் பார்க்க மாட்டியா…? எப்ப வருவான்.. வேலை வைக்கலாமுன்னு’ புவனாவிடம் சீறி விழுந்தபோது…..
எனக்குள் இருந்த மிருகத்திற்கு எத்தனை கால்கள்…!?